Saturday, June 12, 2010

வீடு வாங்கலையோ வீடு!

அந்த பாங்குல, 7.5% வட்டி, இதுல,90% லோன் தரான்!
ப்ரொபெர்டி ப்ளஸ், வாங்கிப் பாக்க வேண்டிதானே!, எங்க மாப்பிள, போன மாசம், தான், மடிப்பாக்கத்தில கிரவுண்டு வாங்கினார், அவர்ட கேட்டாக்க கான்டாக்ஸ், கிடைக்கும்.
வேளச்சேரி, பக்கம், தண்ணி கஷ்டம்.! சோழிங்க நல்லூர் பக்கம், ரேட், ஏறும்கறா, அங்க வேணா பார்ப்போமா...!

அந்த பில்டர், டயத்துக்கு, சாவி, தருவானோ!3 ரூம் ப்ளாட்டா? செர்வீஸ் ஏரியா இருக்கா? கார்ப்போரேஷன் தண்ணீ வருமா?லிப்ட் இருக்கா? மெய்ன்டெனெனன்ஸ் எவ்ளோ? இப்படி சென்னை செந்தமிழ்ல எதுவும் கேக்காம, சிங்கப்பூர்ல வீடு வாங்க நினச்சோம்.

வீடு பாக்கறோம்னு, தெரு தெருவா,ஏரியா ஏரியாவா, அலசி...என் திருவாளர், கேட்டதால, நோட்ஸ்(?!) வேற எடுத்து... ஒரு ஏஜெண்டு கூட கைடட் டூர் போனோம், ஒரு வாரம் கூட விடாம!.
இந்த வீடு, ஸ்டேஷன் பக்கம், இது, ப்ரைவேட் காண்டொமினியம், நமக்கு தருவானா?இப்படி சில வினாக்கள்!

அஞ்சு சனிக்கிழம விடாம சுத்தினா வீடு கிடைக்குமுனு, முக்கு வீடு, ஜோஸியர் சொன்ன மாதிரி, கடைசியில வீடும் கிடைச்சுது.
5% இப்பவே தரணும், தந்தா, ஓனர் அடுத்த ரெண்டு வாரத்துக்கு வீடை யாருக்கும் காட்டமாட்டார், அதுக்குள்ள டீலா, நோ டீலானு முடிவு பண்ணனும். அப்டி ரெண்டு வாரத்துல, முடிக்க முடியலைனா, பணம் வாபஸ் தரப்பட மாட்டாதுனு, சீட்டுக்கடைக்காரன் மாதிரி சொன்னவங்களைப் பாத்து, நீங்க நல்லவரா? கெட்டவரானு கேக்க முடியாம நொந்து நூடுல்ஸ் ஆனோம்.!கேட்டதைக்கொடுத்துட்டு, மொத்த விலைல, கொஞ்சங் கூட குறைக்க மாட்டேங்கறானே கிராதகன்னு, மனசுக்குள்ள நொந்தோம்.

அடுத்த வாரம், இந்தியாவுக்கு, தொ(ல்)லைபேசியில, சொன்னா, வீட்டு வாசல், எந்த பக்கம் பார்த்து இருக்குனு எல்லாரும் மாறி மாறி கேட்டு எங்களை காம்பஸ் தேட வெச்சா!

பத்து வாரத்துல சாவி கிடைக்கும், நீங்க இந்த லாயரைப் போய் பாருங்கோன்னு, பாங்குல சொன்னான்!

சத்தியமா சொல்றேன், அந்த லாயர் மாதிரி, நம்மூர்ல பாக்கல!, இருக்கற எல்லா வாரியத்துக்கும், கடுதாசி போட்டானுங்க!. இவங்க வீடு வாங்கற எடத்துல், ரோடு வருமா, ரெயில் தண்டவாளம் வருமானு கேட்டு, பதில், போட சொல்லி வாங்கினானுங்க. ஆனா, வில்லங்கமில்லைனு தெரிஞ்சா தான், பாங்க் லோன் கொடுப்பான். நம்ம ஊர்ல, பட்டாணி, கடலை மாதிரி, லோன் கொடுத்துட்டு, அப்புறம், பிரச்சனைனு லோன் வாங்கினவன், போய் அழுதா, பாங்கு ஆளுங்க, மறதி வந்த மாறி நடிக்கறானுங்க.

வீடு ஒரு வாட்டி பாத்துக்குங்கோ, அப்புறம் அதில்லை இது இல்லைங்கக்கூடாதுனு, சொன்னான், ஏஜண்ட். அங்க இங்கனு எல்லா முக்கும் பார்த்தோம்.
வீடு சாவி நாங்களே வாங்கி தருவோம்; டாகுமெண்ட், எலக்ட்ரானிக், அதுனால, பத்திரம் மாரி இல்லனு சொன்னார், லாயர். ஆச்சரியமா அவருக்கு ஒரு ஓ போட்டோம்.

வீட்டுக்குத் தேவையான அனைத்தும் வாங்க வசந்த் & கோ இங்க இல்ல. மறுபடியும் தேடுதல் வேட்டை. சோபா, சுவர் கலருக்கு மாட்ச் ஆகணும்னு, நாங்க எங்க வீட்டு, போட்டோவோட கடைக்கு போனது, உச்சக்கட்ட ரவுசு!

பிள்ளையார் பூஜை பண்ணலானு, வாத்தியாரைக்கூப்டா, அவர், வாங்கின 150 டாலருக்கு, மந்திரத்தை சொல்லாம, எங்க கதையைக்கேட்டார். உங்க பூர்வீகம், எங்க? உங்க தம்பிக்கு வரன் பாக்கறேளா இப்படி நிறைய. பிள்ளையார் அவரை ஒரு கொட்டு வெக்க மாட்டாரானு இருந்தது எங்களுக்கு!

வீடு உள்ள வந்த பிறகு, ஒரு சில விஷயங்க தான், வீடு வீடா இருக்க காரணம்னு பட்டுது. அமைதியான சூழல், நம் விஷயத்தில், மூக்கே நுழைக்காத அக்கம்பக்கம், ஜன்னலில் தெரியும் அழகான வானம், அப்பப்போ பெய்யும் மழை (ஆமாம், நல்லவங்க நாங்க இருக்கோம்ல!)., நிறைய மரங்கள், அதுல பல வண்ணப்பூக்கள், பறவைகளின் ஒலி, நானும் இருக்கேன்னு அப்பபோ காமிக்கற குயில், இதல்லாம், நாங்களே எதிர்பார்க்காத பெரிய வரம்னு தான் சொல்லுவேன்.




பத்து பன்னிரண்டு தென்னை மரம் பக்க்த்திலே வேணும்னு, பாரதியார் ஏன் பாடினார்னு இப்போ எங்க ரெண்டு பேருக்கும், நன்னாவே தெரியறது!.



எந்த இடம், உங்களுக்கு மன அமைதியும், நிம்மதியும் தருமோ அது தானே வீடு!. இப்பல்லாம், பாரதியார், பாணியிலே, அம்மா, நிந்தன் காவலுற வேணும்னு வேண்டறேன். அம்மாவின் அருளால தான், அழகான வீடு கிடச்சுது.

நாளை நம்ம சந்ததிகளுக்கு, குயில் காக்கானு எதுவும், இல்லாமலே போகலாம்!
நம்மால செய்ய முடியற சில சில விஷயங்கள், கண்டிப்பாக பண்ணனும்னு முடிவு பண்ணினோம். கடைகளுக்கு காய் வாங்க போகும் போது, துணிப்பை எடுத்து போறது,கூடியவரை அச்சடிக்காம இருக்கறது, பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவது, இப்படி ஒரு சில.

இப்போ நல்ல வீடில் வாழுகிற சந்தோஷத்தோட மன நிறைவும் இருக்கு!

2 comments:

  1. அருமையான பதிவு. வீடு வாங்குவதில் இருக்கும் கஷ்டங்களை அழகாய், நகைச்சுவையாய் வர்ணித்தாய். வீடு வாங்கியதற்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. நன்றி ஆர்த்தி. :)-

    ReplyDelete