Wednesday, August 20, 2014

தேடிக்கண்டு கொண்டேன் - திருவதிகை (A trip to Thiruvadhigai Temple, TamilNadu)

To read the below in English: Click here.https://docs.google.com/document/d/1XxZ5bJde3yoIXLhVnp3xJQ-vMVKEjnLsJ1Z8mz0gzcY/edit?usp=sharing

இந்த முறை இந்தியா சென்றபோது, முன்கூட்டியே இதுவரைப்பார்க்காத கோயில்களில், சிலவற்றை பெற்றோருடனும், பிள்ளையுடனும் பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.

நாங்கள் அனுபவித்த திருவதிகைக்கோயில் பற்றிய பகிர்வு இதோ!

திருவதிகை:
1.முதல் தேவாரப்பதிகம், பாடப்பெற்றக்கோயில்;
2.கெடில நதிக்கரையில் அமைந்த தலம்;
3.அப்பர் பெருமானின் அக்கா திலகவதியார் அன்றாடம், தன் தம்பி திரு நாவுக்கரசர் சைவ நெறியைப்பின்பற்ற வேண்டி சிவனாரை, நெஞ்சுருகி வழிப்பட்ட தலம்.
4.சிவபெருமானின், 8 வீரட்டானத்தலங்களில் இதுவும் ஒன்று.
இறைவன்: வீரட்டானேசுவரர்; இறைவி: கெடில நாயகி


இந்த தலம், பன்ருட்டி அருகில் உள்ளது.
எங்களுக்கு சுமார் 2 மணி நேர பயணம், பாண்டிச்சேரியில் இருந்து.

நாங்கள், ஒரே நாளில், திருவதிகை, திருவந்திபுரம், மற்றும், திருப்பாதிரிப்புலியூர் சென்று தரிசித்து வந்தோம்.

கால மாற்றத்தில், இன்றைய திருவதிகை ஒரு சிறிய கிராமம்; காலை 8 மணி!
ஒரு திருமணம் முடிந்து, மணமக்களும், சுற்றத்தாரும், கோயிலை விட்டு,வெளியேறிக்கொண்டிருந்தனர்;
மணப்பெண்ணின் வெட்கத்தைப்பார்த்து புன்னகைத்தபடி நடந்தோம்.
அதிக பேர் இல்லை.
கோயிலின் முன்புறத்தோற்றம் உங்களுக்காக:



முதலில் கண்ணில் பட்டது இந்தஅருகக்கடவுளின் சிலை.
சிவன் கோயிலில், அருகக்கடவுள் சிற்பம், அதிசயம் தான்!

இந்தக்கோயில்,முதலாம் மகேந்திர வர்மனால் (Mahendra Verma Pallava -I) 6ஆம் நூற்றாண்டில், முதலில் சமணக் கோயிலாய் (Jain Temple) கட்டப்பட்ட இடத்தில், பின்னர் அதே அரசரால், சிவன் கோயிலாய் கட்டப்பட்டது.

27 நட்சத்திரம், மற்றும் 12 ராசிக்காரர்களுக்கான மரங்களை,
வளர்த்து வைத்திருக்கிறார்கள். அவசியம்,மூலிகை சம்பந்தமாக ஆராய்ச்சி செய்பவர்கள் பார்க்க வேண்டிய கோயில்.

பெரும்பாலும் நம் தலமரங்கள், மூலிகைத்தாவரங்களே. சமீபத்தில், நெல்லிமரத்தைத் தல விருட்சமாகக்கொண்ட திருநெல்லிக்கா என்ற தலத்தைப்பற்றி அறிந்தேன்.

சரி! திருவதிகையைப்பற்றி, பார்ப்போம்!

அப்பர் பெருமானின் சூலை நோய் , அவரை முடக்கி எடுக்க, இந்தக்கோயில், வீரட்டானேசுவரரிடம், தன் நோய் தீர்த்தருள வேண்டிப்பாடினார்.
முதல் தேவாரப்பாடல் உருவானது!.





இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலும், அப்பர் பெருமானின் மிகுந்த வலியையும், தாங்க முடியாத வேதனையில், மனித மனம் என்னவெல்லாம் சொல்லி அழுமோ,அந்த உணர்வையும் பிரதிபலிக்கிறது.

லிங்க திருமேனியில், 16 செங்குத்தான உலோக பட்டைகள் காணப்படுகின்றன. மனதை வருடிய தரிசனம்.


இங்குள்ள சரக்கொன்றை மலர்கள், நாம், பரவலாய், காணுகின்ற பூக்கள் தான்; அவை நீர்ழிவு நோய்க்கு மருந்து. நாங்கள், கேரளத்தின், திரு அஞ்சைக்களத்திற்கும், இதே தல விருட்சம் எனக்கண்டோம்; அது, சுந்தரர், விண்ணகம் நோக்கி புறப்பட்ட தலம்; இது அப்பரை, இறைவன், ஆட்கொண்ட தலம்.

மிகுந்த வேதனையிலிருந்து, மன அமைதி தர வல்லது, இந்த தலம்.

இன்றும், மன நிம்மதி வேண்டியும், தன் வயிறு சம்பந்தமான உபாதைக்கள் தீரவும் இங்கு வருவோர் பலர். (Intestine related/Ulcer Ailments cure).

கண்ணுக்கு அழகாய், அரிதான, நிறைய சிற்பங்கள்; அவற்றில், சில இங்கே.
புகைப்படங்களைக்காண கீழ்கண்ட படத்தில் சொடுக்கவும்.
அன்னதானம், தினமும் நடக்கிறது. நாங்கள் அடுத்த வாரத்தில் வந்த எங்கள் மண நாளில், அன்ன தானத்திற்கு, கொடுத்து, விடை பெற்றோம்!. நீஙகளும் போய் வாருங்கள்