Friday, April 18, 2014

பினாங்கு, மலேசியா- மார்ச் 2014- பயண அனுபவம் (1)

அதிக அளவில், தமிழர்கள் வாழும், மலேசியாவின், வடமேற்கு பகுதியில் உள்ள ஊர் பினாங்கு. மலேசியாவின், மிகச்சிறிய மா நிலங்களில், பினாங்கும் ஒன்று.
 வழியெங்கும், நிறைய இந்துக்கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், சீனக்கோயில்கள், புத்தர் கோயில்கள் என, ஒரு கலாச்சாரக்குவியலாய், இருக்கிறது பினாங்கு.

சிங்கப்பூரில் இருந்து 40 நிமிட விமான பயணம் எங்களுக்கு.
Courtesy: Wikipedia.

13.5 km நீளத்தில், ஒரு மிகப்பெரிய பாலம், பெனாங்கின் இரு தீவுகளையும்  (Pulau Pinang, Seberang Perai) இணைக்கிறது. படகிலும், மற்ற தீவுக்குப்போகலாம். ஒரு வழி தான், கட்டணம் செலுத்த வேண்டும். :)பெனாங்கின் முக்கிய துறைமுகமான - Butterworth, Seberang Perai-ல்- உள்ளது.

சமீபத்தில் தான் இரா. கார்த்திகேசு அவர்களின், பினாங்கை மையமாகக்கொண்ட கதையைப்படித்தேன். பெனாங்கின் நீண்ட பாலத்தைப்பற்றிய கற்பனை என்னுள். நாங்கள், பினாங்கிலிருந்து,கிளம்பிய அன்று, எங்கள், வண்டி ஓட்டுனர்- இந்த நீண்ட பாலத்தையும் காட்டினார்.

 George Town வட்டாரத்தில் தான் நாங்கள் தங்கிய  Traders Hotel இருந்தது.. இங்கிருந்து, 20 நிமிடங்களில்,  Little India-வைஅடையலாம். 3 வயசு பையனோட போகும் போது, தோசைக்கு என்ன வழின்னுதான், முதல்ல பார்த்தோம்.நாங்கல்லாம் ரொம்பவே கருத்து!. :)

முதலில் ஒரு தாய்லாந்து வழி- புத்தர் கோயிலுக்கு போனோம். (Wat Chaymangalkaram).இது, பெங்காக்கின்  Wat Phoவில் உள்ள புத்தரின் சிலையைப்போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

33 அடி நீளத்தில், மிக பிரமாண்டமாய், உறங்கும் புத்தரைக்கண்டோம். என்ன அழகு கண்கள்!!!. இந்த கோயிலின் மேற்சுவர்களில், புத்தரின், கதை, சிற்பங்களாய் இருப்பது, இன்னும் அழகு.

இந்த கோயிலில், எடுத்த சில புகைப்படங்கள் இதோ!
1. உச்சி வெயிலிலும், கடமை உணர்ச்சியில் , நிற்கும் துவார பாலகர்  (At Wat ChayMangalkaran)

2.அனந்த சயனத்தில், புத்தர்



3.கடவுளின் ஆசியுடன், உலகுக்கு வந்த குழந்தை புத்தர் (at Wat Chaymangalkaran-Thai style)

4.சகஸ்ர புத்தர்  மேற்சுவர்களில் (@ Wat ChayMangalkaran
5.அமைதியின் உருவம்

6.புத்தரின் திருவடி

இதற்கு, நேர் எதிரில், பர்மீய முறையில், ஒரு புத்தர் கோயில்.  (Dharmi Karama Burmese Temple).இரண்டு கோயில்களும், புத்தரின் பெருமையை அழகாய் கூறுகின்றன.
இந்த கோயிலும், மிக அழகு- ஒரு புத்த குரு எல்லாரையும் ஆசீர்வதித்துக்கொண்டு, துதித்துக்கொண்டும் இருந்தார்.

இந்த கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில், உலகின் பல நாடுகளில், உள்ள புத்த சிலைகளை வைத்து இருக்கிறார்கள். புத்தரின் கை முத்திரை, புத்த மதம், அந்த நாட்டில், பரவிய நூற்றாண்டு, என அதுவும் ஒரு புதிய அனுபவம்.



1.பர்மா முறையில் (at Dharmi Karama Buddhist temple)
2.புத்தரைத்தொழும், என் மகன் சித்தார்த் :)


3.இலங்கையின் புத்தரைப்போல தானும் கைமுத்திரைக்காட்டும் சித்தார்த்

4. இன்னொரு பெரிய புத்தர் (@ Dharmi Karama Burmese temple's Pagoda)

சரி- அப்படியே கொஞ்சம், பழனியாண்டவரையும் தரிசிப்போமா? "தண்ணீர் மலை முருகன் கோயிலுக்கு போங்க!- அங்க தான் தைப்பூசத்துக்கு காவடி எடுத்து வருவாங்கனு"- பார்க்கிற எல்லா தமிழர்களும் சொல்ல நாங்களும் போனோம்.
என் பையன், அம்மா தூக்குனு அவனைக்காவடி தூக்க சொன்னான். முருகன் சுமாரா ஒரு 300 படிக்கு மேல உக்காந்து இருக்க, இது என்னடா சோதனைனு ஆகிப்போச்சு.இருட்டவும் ஆரம்பிச்சது.
சரி, ஏறிப்பார்ப்போம்னா 50 படிக்கே கண்ணைக்கட்ட,சரி-முருகா- அடுத்த முறை வரேன்னு இறங்கிட்டேன். ஆனா மனசு வரலை.
 அப்பத்தான், பக்கத்துல இருந்த செட்டியார் கோயில், கண்ணுல பட்டுது. முருகா என்ன கருணைனு, போய் பார்த்தோம்.


கூட்டமில்லை; அண்ணனும் தம்பியுமாக, பிள்ளையாரும், முருகனும், மட்டும், இந்த தேக்கு மரத்தால் ஆன சுமாரா 100 வருட பழமையான கோவில்ல இருக்காங்க.

திண்ணையில்- பழனியாண்டவருடன்

அம்மா, அப்பா, எதிர்த்த மாதிரி தனிக்கோவில்ல இருக்காங்க. நான் இது வரை பார்த்த கோவில்களில், முருகரும், பிள்ளையாருமாக தனிக்கோயில் இங்க தான்.எங்களுக்காகவே முருகன் இங்க இருந்த மாதிரி இருந்தது.

(மீண்டும்)