Wednesday, March 23, 2016

கல்யாண தேனிலா.. காய்ச்சாத பால் நிலா...!

போன டிசம்பர் மாசம் (12.12.15), மாலை ஒரு ஆட்டோல அண்ணா சாலை பக்கம் போய்கிட்டு இருந்தேன். எல்லாரும் வானத்தையே பார்த்துட்டு இருந்தாங்க.
ஆட்டோ ஓட்டுனர் சொன்னாரு
- ஏன் எல்லாம் வானத்தையே பார்க்குறாங்க. உலகம் அழிய போகுதா?



நானும் வெளிய தலைய விட்டு மேல பார்த்தா- நிலாவிலிருந்து பால் வழியற மாதிரி காட்சி.
நான் ஏதோ ஒரு தனிப்பட்ட பிரச்னையை நினச்சு, மனசளவுல நொந்து போய் வந்துகிட்டு இருந்தேன். ஏதோ கடவுள் அருள் மாதிரி அந்த நொடி நினச்சேன்.

வீட்டுக்கு வந்து பேப்பரை பார்த்தா- நம்ம சிங்கப்பூர் செயற்கைக்கோள் 
ஸ்ரீஹரி கோட்டாலேந்து விட்டு இருக்காங்க.
ஒரே அல்வாவா போச்சு. :)




No comments:

Post a Comment