Tuesday, March 22, 2016

சீன மூங்கில் - விடா முயற்சி சொல்லும் பாடம்!


என் பையன் படிக்கும் பள்ளியில் கண்ட ஒரு சுவரொட்டி இது.
ஒவ்வொரு குழந்தையும் ஒரு விதம்; ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் வேறானது. குழந்தைகளை ஒப்பிடவும் வேண்டாம்; ஓடி விளையாட கூட நேரமின்றி அவர்களை எப்பொழுதும் படிக்க சொல்லவும் வேண்டாம்.

இப்போதுள்ள அவசர யுகத்தில், அம்மாக்கள் whatsapp  போன்றவற்றை கூட தத்தம் குழந்தைகளை பற்றிய அலசலாக ஆக்கும் கூத்தையும் காண முடிகிறது.

என் தோழிகளில் சிலர், வார வாரம் , வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி பற்றி படித்து கொண்டிருப்பர்; இவை எல்லாம் ஒரு அளவுக்கு தான் உதவும்.

குமரகுருபரர் என்ற ஒரு சைவ பெரியவர். சகலகலாவல்லி மாலை, மீனாட்சி பிள்ளை தமிழ் என பல நூல்கள் இவர் அருளிவை.
இவர் பிறந்து முதல் 5 ஆண்டுகள் ஒன்றும் பேசவில்லை.கந்தர் கலி வெண்பா பாடினார்- தன் ஐந்தாம் வயதில்!

தாய்மை என்பது ஒரு அனுபவம். ஒரு சின்ன குழந்தையோடு அதன் உலகில் பயணிக்கும் அனுபவம். தாயும் தந்தையும் தான் அவர்களுக்கு ஹீரோ ஹீரோயின் . 

குழந்தைகள் தங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உள்வாங்கி வளர்கின்றனர். அவர்களுக்கு உரமாக நாம் தர வேண்டியது அன்பும், நல்ல அரவணைப்பும் மட்டுமே. சட்டென்று அவர்கள் தங்கள் வளர்ச்சியில் நம்மை வியக்க வைக்கின்றனர். 

என் மகனிடம் போன வாரம் சொன்னேன் - அம்மாவிற்கு ரொம்ப கால் வலிக்கிறது. இப்போது உன்னை விளையாட அழைத்து செல்ல முடியாதென.
அவன் மீண்டும் பிடிவாதம் பிடிக்க - காலையிலிருந்து உட்கார நேரமில்லை தம்பி. உனக்கு இதயம் இருக்கானு கேட்டேன்.
அவன் சொன்னான்- என்னிடம் triangle  square  எல்லாம் இருக்கு; ஹார்ட் இல்லைன்னு . நொந்துட்டேன்; அவனோட கிளம்பி கீழ போனேன் :)





No comments:

Post a Comment